உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

பண்ருட்டி வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 29ம் தேதி மனுநீதி நாள்

கடலூர் : 

                 பண்ருட்டி வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வரும் 29ம் தேதி டி.ஆர்.ஓ., தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

                     டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் வரும் 29ம் தேதி பண்ருட்டி வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மனுநீதி நாள் நடக்கிறது. அதையொட்டி முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முன்பாக பொதுமக்களிடமிருந்து மனுக் கள் பெறப்படும் பெட்டி வைக்கப்படும். மனு கொடுக்க விரும்பும் பொதுமக்கள் நேரில் வந்து மனுக்களை பெட்டியில் போடலாம்.

                  இன்று காலை 10 மணிக்கு வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் நேரில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரம் மற்றும் கோரிக்கைகளுக்கான பதிலினை மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும்.

                      மனுநீதிநாளன்று கிராமத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்களை சம்மந்தப் பட்ட துறையினர் செய்து காண்பிக்கவுள்ளார்கள். கிராம பொது மக்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior