உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பாமக ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:
 
                     தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண உயர்வைக் கண்டித்தும், நீதிபதி கோவிந்தராஜன் நிர்ணயித்த கட்டணத்தை அமல்படுத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் வி.ஜி.சிட்டிபாபு தலைமை வகித்தார். மாநில விளம்பர அணிச் செயலர் வேணு.புவனேஸ்வரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேதாஸ் படையாண்டவர், மாவட்ட துணைத் தலைவர் பி.கே.அருள், நகரத் தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நகரச் செயலர் வி.முத்துக்குமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior