உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

சிதம்பரம் நடராஜர் கோவிலில்ஆனி திருமஞ்சன கொடியேற்றம்

 

சிதம்பரம் : 

                    சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நேற்று நடந்த கொடியேற்று விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு, கடக லக்கினத்தில் சிற் சபை எதிரிலுள்ள கொடி மரத்தில் உற்சவ மூர்த்திகளான பஞ்ச மூர்த்திகள், உள், வெளி பிரகாரங்கள் வலம் வந்து கொடியேற் றும் நிகழ்ச்சி நடந்தது.

                        உத்சவ ஆச்சார்யர் நடராஜ ரத்ன தீட்சிதர் கொடி ஏற்றி வைத்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 18ம் தேதி ரிஷப லக்கினத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் தேர் உற்சவமும், இரவு ஆயிரங்கால் மண்டபம் முன் ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது. 1ம் தேதி நடராஜமூர்த்திக்கு, மகா அபிஷேகம் மற்றும் தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior