உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஆத்ம திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் : 

                            சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் துறை மூலம் ஆத்மத் திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

                                சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் வேளாண் துறை மூலம் ஆத்ம திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, கால் நடை, மீன்வளம், வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் மூலம் விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆத்ம திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் அலுவலர்கள் ரமேஷ், குப்புசாமி, பி.டி.ஓ.,ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior