உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

ஒன்றிய அலுவலக மரத்தூண்கள் ஏலம்பணம் செலுத்தாததால் மீண்டும் ரத்து

கடலூர் : 

                      கடலூரில் இடிந்து விழுந்த ஒன்றிய அலுவலகத்தில் பழைய மரத்தூண்கள் விடப்பட்ட ஏலம் நேற்று முன்தினம் மாலை ரத்து செய்யப்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் கனமழையில் இடிந்து விழுந்தது. 105 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் இருந்த பிரமாண்டமான பர்மா தேக்கு தூண்கள் மற்றும் இரும்புகள் கடந்த 7ம் தேதி ஏலம் விடப்பட்டது. டெண்டர் எடுப்பதற்காக ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டதால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் நடந்தது.

                        அதில் அலுவலக கட்டடத்தில் உள்ள மரங்கள் மற்றும் இரும்புகளுக்கு அரசு 14 லட்சத்து 21 ஆயிரத்து 180 ரூபாய் நிர்ணயம் செய்தது. இந்த டெண்டரை விழுப்புரத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை மொய்தீன் என்பவர் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கு எடுத்தார். இதற்கான தொகையை 24 மணி நேரத்தில் அலுவலகத்தில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. விதிமுறைப்படி நேற்று மாலை 4 மணிவரை டெண்டர் எடுத்த தொகையை செலுத்தவில்லை. இதன் காரணமாக விடப்பட்ட டெண் டர் ரத்து செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior