உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

வடலூரில் நின்றிருந்த கார் தீப்பிடித்ததால் திடீர் பரபரப்பு

குறிஞ்சிப்பாடி : 

                      வடலூரில் நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று மாலை மயிலாடுதுரையில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த டாடா இன்டிகா கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் மயிலாடுதுரை செந்தில்குமார் அருகில் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது காரில் ஏ.சி., இயங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட் டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior