உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

காதல் தகராறில் கத்திக்குத்து: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

 கடலூர்:

                  காதல் தகராறில் பெயிண்டரைக் கத்தியால் குத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

               கடலூர் புதுப்பாளையம் மீன் அங்காடித் தெருவைச் சேர்ந்தவர் சலீம் (25). அதே பகுதியைச் சேர்ந்த இளம் விதவையை சலீம் காதலித்து வந்தார். ஆனால் அப்பெண் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரை காதலித்து வந்தாராம்.  ஒருவர் காதல் மற்றவருக்குத் தெரிய வந்ததால், பாஸ்கருக்கும் சலீக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சலீம் 3-1-2009 அன்று, பாஸ்கரை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார். பலத்தக் காயம் அடைந்த பாஸ்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணம் அடைந்தார். கடலூர் புதுநகர் போலீசார்  வழக்குப் பதிவு செய்து, சலீமைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை கடலூர் கூடுதல் சார்பு நீதிபதி ஜெயக்குமார் விசாரித்து திங்கள்கிழமை தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட சலீமுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior