உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

செம்மொழி மாநாடு: கலைஞர், பொதிகையில் நேரடி ஒளிபரப்பு


              
            தமிழ் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் கலைஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் கலைஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. மாலையில் நடைபெறும் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வெள்ளிக்கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' சிறப்புக் கருத்தரங்கம் ஆகியன கலைஞர் தொலைக்காட்சி மற்றும் அதன் செய்திகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. இதைத் தவிர மாநாடு முடியும் வரை தினமும் இரண்டு மணி நேரம் வரையில் முன்தினம் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior