உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

கடலூர் அருகே தொழிலாளி மர்மச்சாவு

கடலூர்:

             கடலூர் அருகே தொழிலாளி முருகதாஸ் (38) மர்மமான முறையில் இறந்து கிடந்தது, செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.  கடலூர் அருகே சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குருவி என்ற முருகதாஸ். கட்டுமானத் தொழிலில் கம்பி ஃபிட்டராகப் பணிபுரிந்தார். திங்கள்கிழமை காலை வேலைக்குச் சென்ற முருகதாஸ் இரவு வீடு திரும்பவில்லை. 

                செவ்வாய்க்கிழமை காலையில் பார்த்தபோது, அவர் சுத்துக்குளம் அருகில் உள்ள சவுக்குத் தோப்பில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சடலத்தை கடலூர் முதுநகர் போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். முருகதாஸின் தம்பி கண்ணன் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இறந்துபோன முருகதாசுக்கு சாந்தி (30) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். தகவல் அறிந்ததும் கடலூர் நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்று, முருகதாஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior