உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சுடர் ஓட்டம்

சிதம்பரம்:

               புவனகிரி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சுடர் ஓட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஷிட்டோ-ரியோ இந்தியன் கராத்தே பள்ளியிலிருந்து புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை இந்த விழிப்புணர்வு சுடர் ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சுடர் ஓட்ட நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆ.கலைச்செல்வன் தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்களும், கராத்தே பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். முனைவர் சி.ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். முன்னதாக சிதம்பரம் கீழபுதுத்தெருவில் விழிப்புணர்வு சுடர் ஓட்ட நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.மணவாள ராமானுஜம் தொடங்கி வைத்தார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior