உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

தமிழ் வழக்காடு மொழி: விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

                  விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும். மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை ஏற்றார், வழக்கறிஞர்கள் குமாரசாமி, கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், மணிகண்டன், சிவக்குமார், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior