உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு: பிராமணர் சங்கம் வாழ்த்து

கடலூர் : 

              கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற பிராமணர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடலூர் கிளை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

                 தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பல தமிழ் அறிஞர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்கள், கட்டுரைகள், புதினங்கள் வெளியிட உள்ளனர். இதைக் கண்டு களிக்க உலகமெங்கிலும் இருந்து தமிழ் புலவர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கட்சித் தலைவர்கள், பொது மக்கள் பங்கேற்று தமிழ்த்தாய்க்கும் நம் நாட்டிற்கும் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பில் பாராட்டுதலையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior