உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

சிதம்பரத்தில் பதிவுப் பத்திரங்கள், விண்ணப்ப ஸ்டாம்புகள் தட்டுப்பாடு

சிதம்பரம்:

               சிதம்பரம் பகுதியில் பதிவுப் பத்திரங்கள் மற்றும் விண்ணப்ப ஸ்டாம்புகள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பத்திரங்கள், விண்ணப்ப ஸ்டாம்புகள் துணைக் கருவூலம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. பத்திரம் தட்டுப்பாடு குறித்து துணைக் கருவூல அதிகாரிகளை கேட்டால் இருப்பு இல்லை என தெரிவிக்கின்றனர். 

              சிதம்பரம் பகுதியில் 2,5,10 ரூபாய் ஸ்டாம்புகள் கிடைக்கவில்லை. ரூ.1 ஸ்டாம்பு மட்டுமே கிடைக்கிறது. அதேபோல் 100, 500, 1000 ரூபாய் பத்திரங்கள் கிடைக்கவில்லை. 20, 50 மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பத்திரங்கள் மட்டும்தான் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வெளி மாவட்டங்களிலிருந்து பத்திரங்களை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. பத்திரப்பதிவு ஊழல் ஏற்பட்டதிலிருந்து வெளி மாவட்டங்களிலிருந்து வாங்கப்படும் பத்திரங்கள் மற்ற மாவட்டங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றால் பத்திரம் வாங்கிய அம்மாவட்ட பதிவாளரிடம் கடிதம் பெற்று வந்தால்தான் சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வீண் செலவும், கால விரயமும் ஏற்படுகிறது.  எனவே பொதுமக்கள் நலன் கருதி தங்கு தடையின்றி அனைத்து ருபாய் பத்திரங்கள் மற்றும் விண்ணப்ப ஸ்டாம்புகள் கிடைக்க மாவட்ட கருவூல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior