உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி உண்டு உறைவிட பள்ளிக்கு விடுமுறை

கடலூர், :

              அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வந்த உண்டு உறைவிட பள்ளி மாவட்ட நிர் வாகத்தின் அனுமதியின்றி விடுமுறை விடப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


               கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கஸ்தூரிபா காந்தி வித்யசாலை என்ற பெயரில் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இதில் 50 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியை நிர்வகித்து வரும் தனியார் தொண்டு நிறுவனம் சரிவர பராமரிக்காததால், இந்த பள்ளியை வடலூரில் உள்ள சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்துடன் ஒப்படைக்க கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார். கல்வி இயக்க அதிகாரிகள் நேற்று சென்ற போது உண்டு உறைவிடப் பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior