உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

முன்விரோதம் காரணமாக பா.ம.க., பிரமுகரை தாக்கிய தே.மு.தி.க.,வினருக்கு வலை

கடலூர் :

                 முன்விரோதம் காரணமாக பா.ம.க., பிரமுகரை தாக்கிய தே.மு.தி.க., கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

                கடலூர் திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (25). பா.ம.க., இளைஞரணி மாவட்ட செயலாளர். இதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். தே.மு.தி.க.,வைச் சேர்ந்த இவர் கடலூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்குள் அரசியல் ரீதியாக முன் விரோதம் உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அய்யனார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடி மற்றும் கத்தியால் தாக்கினர். அதில் படுகாயமடைந்த கார்த்தி, முரளி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து தே.மு.தி.க., கவுன்சிலர் அய்யனார், பாவாடைராஜ், ராஜ்குமார், கொக்கி என்கிற ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior