உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும், சொந்த விவசாய நிலம் உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் அறிவித்தார்.

  கடலூர்  மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

                   தாட்கோ மூலம் இந்த இலவச இணைப்பு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர் பெயரில் நிலப் பட்டா இருக்க வேண்டும். கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மின் இணைப்பு வேண்டி மின்சார வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். இதற்கான வைப்புத் தொகை தாட்கோவால் செலுத்தப்படும். தகுதி உள்ள விவசாயிகள் கடலூர் மாவட்ட தாட்கோ அலுலகத்தில், தகுந்த ஆவணங்களுடன் 30-6-2010க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior