உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அறிவிப்பு


 
             ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு திருச்சியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.இதையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது வழி படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குநர் இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

                  ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி திருச்சியில் 3 மையங்களில் நடைபெறுகிறது.

மையத்தின் பெயர்    பிரிவு 

1. ஆர்.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,         

1. சிறப்பு பிரிவு மற்றும் தெலுங்குரயில் நிலையம் அருகில், 

திருச்சி.              மலையாளம், உருது மொழிப் பிரிவுகள்.

2. தொழிற்கல்விப் பிரிவு. (ஆண்-பெண்).

 2. நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,      

றிவியல் பிரிவு (இரு பாலர்).

பெரியார் நூற்றாண்டு கல்வியியல் கட்டடம், கே.கே. நகர், திருச்சி.          

 3. ஆக்ஸ்ஃபோர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,    கலைப்பிரிவு (இரு பாலர்) பிராட்டியூர் மேற்கு, திருச்சி.16,285 விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

                (தமிழ் வழி -16,128, உருது வழி - 58, தெலுங்கு வழி - 89, மலையாள வழி - 10). கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்களுடைய விவரங்கள், கலந்தாய்வு நடைபெறும் தேதி, கலந்தாய்வு மையம் போன்ற விவரங்கள் பள்ளிக்கல்வி இணையதளத்தில் www.pallikalvi.in/ வெளியிடப்பட்டுள்ளன. 

ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு:

                தமிழ் வழி: அறிவியல் பிரிவு, தொழில்கல்வி பிரிவு விண்ணப்பித்த ஆண்-பெண் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் பெண் விண்ணப்பதாரர்களில் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior