உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

நெய்வேலியில் வேன்மோதி என்.எல்.சி. தொழிலாளி சாவு

நெய்வேலி:

                  நெய்வேலி புதுநகர் 28-வது வட்டம் 2-வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32), என்.எல்.சி. தொழிலாளி. இவர் வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு நோக்கி திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

               இதுகுறித்து நெய்வேலி தெர்மல்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெய்வேலியை அடுத்த மந்தார குப்பம் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவர் மந்தார குப்பத்தை அடுத்த வீணங்கேணி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற பொன்னம்மாள் மீது அந்தவழியாக வந்த வேன்மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior