உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

பண்ருட்டியில் ஐஸ்கிரீம் தயாரிக்க 5 டன் பலாப்பழம் கொள்முதல்

பண்ருட்டி:

               பண்ருட்டி பலாப்பழம் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்க மும்பை நிறுவனம் நேற்று பலாப்பழம் கொள்முதல் செய்தனர். மும்பையில் காமத்ஸ் அவர் டைம்ஸ் ஐஸ்கிரீம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மாம்பழம், அன்னாச்சி, ஆப்பிள், சப்போட்டா, தர்பூசணி, முலாம் பழம் உள்ளிட்ட பழங்கள் மூலம் இயற்கையான முறையில் 25 வகையான ஐஸ்கிரீம் தயாரித்து வருகிறது.

                மேலும் தற்போது கூடுதலாக பலாப்பழம் மூலம் கூழ் தயாரிக்கப்பட்டு ரசாயன, கலர் கலப்பு இல்லாத முற்றிலும் இயற்கை பழ ஐஸ்கிரீம் தயாரிக்க முடிவு செய்தனர். அதன்படி பலாப்பழத்திற்கு முக்கிய நகரமாக விளங்கும் பண்ருட்டியில் பலாப்பழம் கொள்முதல் செய்ய கம்பெனி நிர்வாக இயக்குனர் ரகுநந்தன் சீனுவாசகாமத், இயக்குனர் புஷ்பலதா காமத் ஆகியோர் பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் ஹரிதாஸ் மூலம் பண்ருட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பலா தோட்டங்களை நேற்று பார்வையிட்டு ஐந்து டன் பலாப் பழங்கள் கொள்முதல் செய்தனர்.

இதுகுறித்து உதவி வேளாண்மை இயக்குனர் ஹரிதாஸ் கூறுகையில்,

               "பழுத்த பலாச் சுளையில் இருந்து அல்வா, பலா ஜூஸ், ஐஸ்கிரீம், குல்பி மிட்டாய், பலாப்பழ வற்றல், பலாப் புட்டு, பலா ஒயின், ஜாம் ஆகியவை தயாரிக்கலாம். ஆனால் பலாப்பழம் சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுத்துவதால் பலா விவசாயிகள் மேலும் பயன்பெற முடியாத நிலை உள்ளது. தொழில் முனைவோர்கள் பலாப்பழம் மூலம் ஜூஸ் உள்ளிட்டவைகள் தயாரிக்க முன்வரவேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior