உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

சிதம்பரத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம்; 

              சிதம்பரத்தில் மா.கம்யூ., அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பரத்தில் கடந்த 30ம் தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் விவாதத்தின் போது தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நாற்காலியை வீசியும், மைக் மற்றும் பல்புகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து மா.கம்யூ., - அ.தி. மு.க., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் தனசேகர், மூசா, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருள்மொழித்தேவன், செல்வி ராமஜெயம், நகர செயலாளர் சுந்தர், ம.தி.மு.க., நகர செயலாளர் சீனுவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior