உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை

சிதம்பரம்; 

             முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விரைந்து பணியில் நியமிக்கும் மாறு கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது. 

இது குறித்து வேலையில்லா முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: 

               தமிகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது.ஆனால் பல்வேறு குளறுபடியால் தகுதி உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆசிரியர் நியமனத்தில் உள்ள குளறுபடியை நீக்கி தகுதியானர்வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதுடன், தமிழ்நாட்டில் தமிழ்ப் பட்டம் பெற்று வேலை இல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மறுவாழ்வளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior