உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

வாடிக்கையாளர் சேவைதான் வங்கியின் சொத்து: ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர்

கடலூர்: 

            சேவையும் மதிப்பும் தான் வங்கியின் சொத்தாக விளங்குகிறது என ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் சுரேஷ் ஜான்சன் பேசினார். கடலூர் ஸ்டேட் பாங்க்கில் வங்கியின் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. மஞ்சக்குப்பம் கிளை மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மண்டல ஸ்டேட் பாங்க் மேலாளர் சுரேஷ் ஜான்சன் தலைமை தாங்கினார். கடலூர் கிளை மேலாளர்கள் முதுநகர் செல்லதுரை, திருப்பாதிரிப்புலியூர் வேணுகோபால் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

               கடலூர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டிரஸ்டி சுந்தரம், செயலாளர் கணபதி, பொருளாளர் மகாவீர்மல், டிரஸ்டி அருணாசலம், அரிமா திருமலை, சீனுவாசன், தயா மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி முதல்வர் வானதி, சிறப்பாசிரியர் ரமேஷ் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தயா பள்ளி மாணவர்கள் பயன் டுத்துவதற்கான மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடலூர் ஸ்டேட் பாங்க் சார்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மண்டல மேலாளர் சுரேஷ் ஜான்சன் வழங்கி பேசியதாவது:

                 ஸ்டேட் பாங் க் கடந்த 200 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது. இந்த வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆயிரம் கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய தவறு கூட சரி செய்து மாலை 6 மணியானாலும் வாடிக்கையாளர்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் என வங்கி மேலாளர் அறிவித்துள்ளார். இந்த சேவை தான் வங்கியை இன்னும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் உலக அளவில் ஸ்டேட் பாங்க் சிறந்த வங்கியாக 2வது முறையாக தேர்வு செய்யப்பட் டுள்ளது. சேவையும் மதிப்பும் தான் வங்கியின் சொத்தாக விளங்குகிறது என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior