
சிதம்பரம்:
சிதம்பரம் மாரியப்பாநகரில் பேராசிரியர் ஒருவர் வீட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்கிறது. சிதம்பரம் மாரியப்பாநகர் முதல் தெற்கு குறுக்குத் தெருவில் வசிப்பவர் ஏ.காமாட்சிநாதன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். பேராசிரியர் ஏ.காமாட்சிநாதன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு சென்றபோது அங்கு குறிஞ்சி மலர் செடிகளை வாங்கி வந்து தனது வீட்டு தோட்டத்தில் நட்டு பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்குவது கண்டு அவர் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளார். இவரது வீட்டில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தினமும் வந்து ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக