உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை: கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை

கடலூர்: 

              பொது வேலை நிறுத்தத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய் வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண் டித்து பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரும் 5ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நடந்தது. 

கடலூர்: 

கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், 

                  "வரும் 5ம் தேதி அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலங்கள், பஸ்கள், ரயில்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

விழுப்புரம்: 

கலெக்டர் பழனிசாமி பேசுகையில், 

                "தேவையின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். ஏதேனும் அசம் பாவிதங்கள் நடந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146 - 222656, காவல் துறை கட்டுப் பாட்டு அறை 04146 - 222172, 222174 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior