உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

ஊராட்சி தலைவரை தாக்கியவரை கைது செய்ய கிராம மக்கள் கோரிக்கை

கடலூர்; 

              கடலூர் அருகே ஊராட்சி தலைவரை மிரட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சுய உதவிக் குழுவினர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை சந்தித்து மனு கொடுத்தனர்.

இது குறித்து அரிசிபெரியாங்குப்பம், எம்.புதூர், குமாரப்பேட்டை, மாவடிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் நேற்று கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை சந்தித்து கொடுத்துள்ள மனு:

               கடலூர் அடுத்த எம்.புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் அருள்நாதன். அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சியின் தலைவர். இவரை எதிர்த்து அதே ஊரைச் சேர்ந்த ஆரங்கி என்பர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஊராட்சி தலைவர் அருள் நாதனை முன்விரோதம் காரணமாக தாக்கி லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக ஊராட்சி தலைவர் அருள்நாதன் போலீசில் புகார் செய்துள்ளார். ஆரங்கி கள்ளச்சாரயம் விற்பது கட்டப் பஞ்சாயத்து என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே ஊராட்சி தலைவரை கொலை செய்ய முயன்ற ஆரங்கியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior