உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

எஸ்.ஐ., போட்டித் தேர்வு கடலூரில் இன்று துவக்கம்

கடலூர்,: 

              கடலூரில் சப் இன்ஸ் பெக்டர் தேர்வுக்கான 2 நாள் எழுத்துத் தேர்வு இன்று துவங்குகிறது. தமிழகத்தில் சப் இன்ஸ் பெக்டர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு இன்று முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது. கடலூர் மாவட்டத்திற்கான தேர்வு மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இத்தேர்வில் தற்போது போலீஸ் துறையில் பணியாற்றி வரும் போலீசாரில் 45 பெண் போலீஸ் உட்பட 205 பேர் பங்கேற்கின்றனர். மாவட்டத்தில் 2,420 பேர் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். தேர்வையொட்டி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்டர்கள் , 35 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 150 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior