உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் புது உத்தரவு

கடலூர்:

             வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, மொத்தமாக மனுக்களை வழங்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

             2010ம் ஆண்டுக்கான சுருக்கமுறை திருத்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்து இருந்தார். 

கூட்டத்தில் கடலூர்  மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 

                 வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, ஒட்டு மொத்தமாக மனுக்கள் வழங்குவது தடை செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு உள்ளபடி, அனைத்து விவரங்களையும் படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 1-1-2010ஐ அடிப்படையாகக் கொண்டு, வெளியிடப்பட்டு உள்ள புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை குறித்தும், 10-7-2010 மற்றும் 11-7-2010 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் குறித்தும் அரசியில் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.

                மாவட்ட திமுக இலக்கிய அணிச் செயலாளர் நாராயணசாமி, அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் செ.தனசேகரன், மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், இந்தியக் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் ப.ஜெகரட்சகன், காங்கிரஸ் கட்சி அலுவலகச் செயலாளர் பக்தவச்சலம், பாஜக மாவட்ட அமைப்பாளர் எழிலரசன், பாமக மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் பத்மநாபன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior