உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

கடலூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்


குறிஞ்சிப்பாடி; 

                கடலூர் மாவட்ட தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் அவசர செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி எம். எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். 

             துணை செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல் பணிகளுக்கான முகாம் பற்றிய விவரங்களை மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கிளைகள் தோறும் நிர்வாகிகள் கூட்டத்தினை கூட்டி புதிய வரைவு வாக்காளர் பட்டியல்களை ஒவ்வொரு வீடாக சென்று சரிபார்த்து வாக்காளர் சேர்க்கை நீக்குதல் மற்றும் புகைப்படம் போன்ற திருத்தங்களை விரைந்து முடிக்க வேண் டும்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர் விபரங்களை மாவட்ட கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior