உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் தவிப்பு

நெல்லிக்குப்பம்: 

                நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் வராததால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவித்தனர். நெல்லிக்குப்பம் வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வஜீர்கான் தெருவில் உள்ளது. ஆனால் ஆர்.ஐ., வசந்தி மற்றும் உதவியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை. நேற்று பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கைக்காக ஜாதி, வருமான சான்றிதழ் பெற வந்த 50க்கும் மேற்பட்டோர் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் அலுவலக கதவில் மாலை மூன்று மணிக்கு வருவாய் ஆய் வாளரை சந்திக்கலாம் என நிரந்தரமாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் மட்டுமே உள்ள நிலையில் வருவாய் ஆய்வாளர் எந்த நேரத்திலும் வருவதில்லை. தினமும் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மட்டும் அலுவலகத்துக்கு வந்தாலே அன்றைக்கு வரும் மனுக்களுக்கு கையெழுத்து போட்டு விடலாம். காரணம் கூறுவதை விட மக்களின் சிரமத்தை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior