உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

என்.எல்.சி. ஸ்டிரைக் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆதரவு கேட்டு கடிதம்

நெய்வேலி:

               என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்துக்கு தொமுச மற்றும் பாமக தொழிற்சங்கங்கள் கடிதம் அளித்துள்ளன.

         சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் ஜூலை 5-ல் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தின் முடிவைப் பொறுத்தே ஆதரவு குறித்து தெரிவிக்க இயலும் என ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார். அதுவரை ஒப்பந்தத் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்குச் செல்வார்கள் எனவும் வெங்கடேசன் தெரிவித்தார். நிர்பந்தம் இல்லை. வழக்கம் போல் பணிக்கு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட வேண்டும் என நிர்வாகம் யாரையும் நிர்பந்திக்கவில்லை என என்எல்சி நிர்வாகத்துறை முதன்மைப் பொதுமேலாளர் லூர்தஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுச தலைவர் வி.ராமச்சந்திரன், பணிக்குச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்களை தொடர்ந்து பணியில் ஈடுபடுமாறு நிர்வாகம் நிர்பந்தித்து வருவதாகவும், இதனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்கள் பணிநேரம் முடிந்து வீடு திரும்பமுடியவில்லை என செய்தியாளர்களிடம் கூறினார். 

                இதையறிந்த நிர்வாகத்துறை முதன்மைப் பொதுமேலாளர் லூர்தஸ், அவ்வாறு யாரையும் நிர்வாகம் நிர்பந்தப்படுத்தவில்லை. மாறாக அவரவர் பணி முடிந்து வழக்கம் போல் வீடு செல்கின்றனர் என்றார். இதுதொடர்பாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் கூறுகையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இதுபோன்ற புகார்கள் எதையும் எங்களிடம் கூறவில்லை என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior