உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புறக்கணிப்பு கலெக்டரிடம் முறையிட கிராம மக்கள் முடிவு

திட்டக்குடி ; 

             திட்டக்குடி அருகே வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கிராம மக்கள் கலெக்டரிடம் முறையிட தீர்மானித்தனர்.

              திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் ஊராட்சியில் சாத்தநத்தம் கிராமம் இணைந்துள்ளது. இங்குள்ள இரண்டு வார்டுகளிலும் 2,000க்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். நேற்று காலை 1வது வார்டைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அய்யனார் கோவில் பஞ்சாயத்து சாலையை சீரமைக்கும் பணிக்காக மண் வெட்டி, கூடை, தண்ணீர், உணவு பாத்தித்துடன் ஆதமங்கலம் சென்றனர். ஆனால் பனிரெண்டு நாட்களுக்குப் பின் வேலை தரப்படும் என ஊராட்சி தலைவர் அவர்களை திருப்பி அனுப்பினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏமாற்றத்துடன் அங்குள்ள பெருமாள் கோவில் முன் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து சாத்தநத்தம் கிராம மக்கள் கூறுகையில், 

                 "ஆதமங்கலம் அய்யனார் கோவில் கும்பாபிஷேக பணிக்காக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங் கப்படும் தொகையை செலவிட, ஆதமங்கலம் கிராம மக்களுக்கு மட் டுமே பணிகள் வழங்கப் பட்டு பணம் பிடித்தம் செய்ய இருக்கின்றனர்' என தெரிவித்தனர்.மேலும், மண் சார்ந்த பணிகளில் கிராம மக்களுக்கு வழங்கப்படும் தொகையை ஊராட்சி தலைவர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், சாத்தநத்தம் கிராம மக்களுக்கு பணிகள் வழங் காதது குறித்து கலெக்டர், மாவட்ட திட்ட அலுவலரிடம் நேரில் முறையிட தீர்மானித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior