உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் கொள்ளையை தடுக்க "டயனமிக்' அலாரம்

பரங்கிப்பேட்டை: 

              தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்க "டயனமிக்' அலாரம் பொருத்தப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் திருட்டு, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது மர்ம கும்பல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நகை அடகு கடை, நகை கடைகளில் கைவரிசையை காட்டி வருகிறது. அதனை தொடர்ந்து போலீசார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு அதிகாரிகள், நகைக்கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடத்தி அலாரம் வைப்பதற்கான ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

                 இதன் தொடர்ச்சியாக பரங்கிப் பேட்டை, பு.முட்லூர், பூவாலை, கிள்ளை, தில்லைவிடங்கன் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்க "டயனமிக்' அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.மர்ம கும்பல் கூட்டுறவு வங்கியில் புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டால் பொதுமக்கள் கூடும் அளவிற்கு அலாரம் அடிக்கும். மேலும் போலீஸ் நிலையத்திற்கு போன் "ரிங்' ஒலிக்கும். போனை எடுத்தால் எந்த வங்கியில் கொள்ளை சம்பவம் நடக்கிறதோ அந்த வங்கியின் பெயரை குறிப்பிட்டு "வங்கியில் கொள்ளை நடக்கிறது. உடன் வரவும் என "வாய்ஸ்' மூலம் கொள்ளை தகவல் தெரிவிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு ஊழியர்களுக்கு போனில் இதே தகவலை தெரிவிக்கும். இதனைத் தொடர்ந்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் "டயனமிக்' அலாரம் பொருத்தப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior