உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

கடலூர் மாவட்டத்தில் 55 உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 55 பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை 3) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.  

ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி 14-வது வார்டு மற்றும் புவனகிரி பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர்கள் பதவி, அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியம் 16-வது வார்டு உறுப்பினர் பதவி மற்றும் 3 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி, 48 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகள் ஆக மொத்தம் 55 பதவிகள் காலியாக உள்ளன.  இவற்றுக்கான வேட்பு மனுக்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பெறப்படும். இன்று முதல் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 

               வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-7-2010 மாலை 3 மணி. மனுக்கள் பரிசீலனை 12-ம் தேதி காலை 11 மணி. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 14-7-2010 மாலை 3 மணி வரை. வாக்குப் பதிவு நடைபெறும் நாள் 22-7-2010 காலை 7 முதல் மாலை 5 மணி வரை. வாக்குகள் எண்ணிக்கை நாள் 24-7-2010.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior