உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

மாணவி முதுகில் ரத்தம் நெல்லிக்குப்பத்தில் பீதி

நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் தனியார் பள்ளி மாணவி முதுகில் ரத்தம் வந்ததால், மாணவ, மாணவியர் பீதியடைந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், சரவணபுரம் குமரவேல் மகள் பிரீத்தி (13), கென்னடி மகள் பிளமியா (13), சோழவல்லியைச் சேர்ந்த பாலசுந்தரி (13) ஆகிய மூவரும் நெல்லிக்குப்பம் தனியார் பள்ளியில் ஒரே வகுப்பில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

            நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற மூவருக்கும் முதுகில் தானாக வியர்வை போல் ரத்தம் வந்ததாகவும், கை, கால் வைக்கும் இடங்களில் ரத்தக்கறை படிந்ததாகவும் தகவல் பரவியது. பள்ளி ஆசிரியை, மூன்று மாணவியரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்து பார்த்தார். மாணவி பிரீத்தி முதுகில் வியர்வை போல் ரத்தம் வந்தது கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அனுப்பி வைத்தார். 

இது பற்றி ஆசிரியை கூறுகையில், 

               "பிரீத்திக்கு மட்டும் முதுகில் ரத்தம் வந்தது உண்மை. ஏதாவது நோய் காரணமாக ரத்தம் வந்திருக்கலாம்' என்றார். இந்நிலையில், கெட்ட ஆவியின் செயலால் தான் ரத்தம் வருவதாகக் கூறி மாணவியரை சாமியார்களிடமும், கிறிஸ்தவ பாதிரியார்களிடமும் பெற்றோர் அழைத்துச் சென்றனர். மாணவிகளைப் பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். அந்த மாணவியர் மூவரும் நேற்று பள்ளிக்குச் செல்லவில்லை. இச்சம்பவத்தால் மாணவ, மாணவியர் பீதியடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior