உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

கடலூர் கோர்ட்டில் 6 பேருக்கு 6 மாதம் சிறை

கடலூர் :

                   ஈமச்சடங்கில் பங்கேற்றவரை தாக்கிய 6 பேருக்கு கடலூர் கோர்ட்டில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதே ஊரில் ஈமச் சடங்கு ஒன்றிற்கு சென்றார். அன்று மாலை 7 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த ஊர் தலைவர் சதாசிவம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜானகிராமன், ரவிச்சந்திரன், பாக்கியராஜ், வெங்கடேசன், சரவணன் ஆகியோர் சுந்தர்ராஜன் வீட்டிற்குச் சென்று எப்படி ஈமச்சடங்கிற்கு செல்லலாம் என கேட்டு தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து சதாசிவம் உள்ளிட்ட 6 பேர் மீது கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் (2)ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுகந்தி, ஊர் தலைவர் சதாசிவம், ஜானகிராமன், ரவிச்சந்திரன், பாக்கியராஜ், வெங்கடேசன், சரவணன் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior