உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

கடலூர் முதுநகரில் பாதாள சாக்கடை பள்ளம்: விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

கடலூர் : 

               கடலூர் முதுநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடலூர் முதுநகர் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக முதலில் "மேன்ஹோல்' ஆள் நுழைவு குழிகள் கட்டப்பட்டது. பின்னர் பைப்புகள் புதைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடாமல் உள்ளதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிகளவில் விபத்து உண்டாகிறது. மேலும் துறைமுகம் பகுதிக்கு பஸ் செல்லும் முக்கிய சாலை என்பதால் கடந்த ஒரு மாதமாக பஸ்கள் செல்லமுடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior