உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

சிதம்​ப​ரம்-​ அண்​ணா​மலை நகர் இடையே இருண்டு கிடக்​கும் சிதம்​ப​ரம் ரயில்வே மேம்​பா​லம்


மின்​வி​ளக்கு வசதி இல்​லாத சிதம்​ப​ரம்-​ அண்​ணா​மலை நகர் ரயில்வே மேம்​பா​லம்.
சிதம்ப​ரம்:

            சிதம்​ப​ரம்-​ அண்​ணா​மலை நகர் இடையே ரயில்வே மேம்​பா​லம் திறக்கப்பட்டு ஓராண்​டா​கி​யும் மின்​வி​ளக்​கு​கள் அமைக்​கப்​ப​ட​வில்லை.​ சிதம்பரம்-​அண்ணா​ம​லை​ந​கர் இடையே ரூ.13.31 கோடி செல​வில் ரயில்வே மேம்​பா​லம் அமைக்​கப்​பட்​டது.​ இதன் திறப்பு விழா​வின் போது விரை​வில் பாலத்​தில் மின்​வி​ளக்கு வசதி செய்​யப்​ப​டும் என மாநில அமைச்​சர் வெள்​ளக்​கோ​வில் சுவா​மி​நா​தன் உறு​தி​ய​ளித்​தார்.​ ஆனால் ஓராண்​டா​கி​யும் பாலம் இருண்​டு​தான் கிடக்​கி​றது.​ ​ ​

             இ​து​பற்றி நெடுஞ்​சா​லைத்​துறை,​​ பொதுப்​ப​ணித்​துறை,​​ வரு​வாய்த்​துறை மற்​றும் நக​ராட்சி நிர்​வா​கம்,​​ பேரூ​ராட்சி நிர்​வா​கம் யாரும் கண்டு கொள்ளவில்லை.​ பாலத்​தில் மின்​வி​ளக்கு இல்​லா​த​தால் மாண​வர்​கள் விபத்தில் சிக்கு​வது தொடர்​கி​றது.​   சமீ​பத்​தில் தென்​ஆப்​பி​ரி​காவை சேர்ந்த அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மாண​வர்​கள் இவ்​வி​பத்​தில் சிக்கி கவலைக்கிட​மான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​ ​வி​பத்​துக்​களை தடுக்க இரு​பு​ற​மும் ரவுண்டானா அமைக்​க​வும்,​​ மின்​வி​ளக்கு வசதி செய்​யக்​கோ​ரி​யும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி அண்​மை​யில் மெழு​கு​வர்த்தி ஏந்தி ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது.​ அனைத்து அர​சி​யல் கட்​சி​க​ளும் தீர்​மா​னம் போட்டு மாவட்ட ஆட்​சி​யர் முதல் அமைச்​சர்​கள் வரை மனு அனுப்​பி​யுள்​ள​னர்.​ ஆனாலும் அதி​கா​ரி​கள் கண்​டு​கொள்​வ​தா​கத் தெரி​ய​வில்லை.​ ​அதி​முக வெற்றி பெற்ற சிதம்​ப​ரம் தொகுதி என்​ப​தால் வளர்ச்​சிப் பணி​கள் தொடர்ந்து புறக்கணிக்கப்​ப​டு​வ​தாக எம்.எல்.ஏ.​ அருண்​மொ​ழி​தே​வன் குற்​றம் சாட்​டி​னார்.​ ​ எ​னவே கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் மனி​த​நேய அடிப்​ப​டை​யில் நேர​டி​யாக தலை​யிட்டு மின்​வி​ளக்கு வச​தி​யும் இரு​பு​ற​மும் ரவுண்​டா​னா​வும் அமைக்க வேண்​டும் என்​பதே இப்​ப​குதி மக்​க​ளின் கோரிக்​கை​யா​கும்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior