உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

என்எல்சி பங்குகள் விற்பனை தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

நெய்வேலி :
             என்எல்சி நிறுவனத்தின் 10 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைக் கண்டித்து கடலூர் மாவட்ட திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.  இதற்கு பொதுச்செயலர் சு.அறிவுக்கரசு தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலர்கள் ஆர்.பன்னீர்செல்வம், சொ.தண்டபாணி, அரியலூர் மாவட்டச் செயலர்கள் சி.காமராஜ், க.சிந்தனைச்செல்வன்  உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, என்எல்சி நிறுவனப் பங்குகள் விற்பனை உடனடியாக கைவிடவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திகவைச் சேர்ந்த சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior