உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

என்.எல்.சி.​ ​ ஸ்டி​ரைக் துவங்​கி​யது


நெய்வேலி :
 
              என்​எல்​சி​யில் கால​வ​ரை​யற்ற வேலை​நி​றுத்​தம் புதன்​கி​ழமை ​(ஜூன் 30) இர​வுப் பணி முதல் துவங்​கி​யது.​ ​  
 
              என்​எல்சி தொழி​லா​ளர்​க​ளுக்​கான ஊதி​ய​மாற்று ஒப்​பந்​தத்தை ஏற்​ப​டுத்த வலி​யு​றுத்தி ​ என்​எல்சி தொழி​லா​ளர்​கள் கால​வ​ரை​யற்ற ஸ்டி​ரைக்​கில் ஈடுபடுவார்​கள் என தொமுச செய​லர் ஆர்.கோபா​லன் அறி​வித்​தார்.​ அலவன்ஸ் மற்றும் இன்​கி​ரி​மென்ட் ஆகி​யன முன்​தே​தி​யிட்டு பெறு​வ​தில் தொழிற்​சங்​கத்​திற்​கும்,​​ நிர்​வா​கத்​திற்​கும் இடையே முரண்​பாடு நிலவி வரு​கி​றது.​ ​ ​
 
              இந்​நி​லை​யில் நிறு​வ​னத்​தின் அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட தொழிற்​சங்​கங்​கள் ஒப்பந்​தத்தை விரைந்து முடித்​திட வலி​யு​றுத்தி மே 30-ல் நிர்​வா​கத்​தி​டம் ஸ்டிரைக் நோட்​டீஸ் வழங்​கி​ன.​​ ​ இதை​ய​டுத்து நிர்​வா​கத்​திற்​கும்,​​ தொழிற்​சங்கங்​க​ளுக்​கும் இடையே சம​ரச முயற்சி ஏற்​ப​டுத்​தும் வித​மாக மத்​திய தொழிலா​ளர் நல ஆணை​யர் முன்​னி​லை​யில் சென்​னை​யில் ஜூன் 11 மற்​றும் 15-ல் நடந்த பேச்​சில் எவ்​வித முன்​னேற்​ற​மும் ஏற்​ப​ட​வில்லை.​​ இத​னி​டையே ஜூன் 29-ல் நிர்​வா​கத்​திற்​கும்,​​ தொழிற்​சங்​கத்​திற்​கும் 
 
               இறு​திக்​கட்​டப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.​ இதில் இன்​கி​ரிமென்ட்டுக்​கான நிலு​வைத் தொகையை 01-06-2009 முதல் வழங்க நிர்​வா​கம்  முன்​வந்தது.​ இதை தொழிற்​சங்க நிர்​வா​கி​கள் ஏற்க மறுத்​து​விட்​ட​னர்.​ ​ இதையடுத்து மத்திய தொழி​லா​ளர் நல ஆணை​யர் முன்​னி​லை​யில் சென்​னை​யில் புதன்​கி​ழமை பேச்சு நடத்த தொழிற்​சங்க நிர்​வா​கி​க​ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.​ ஆனால் தொழிற்​சங்​கத்​தி​னர் பேச்​சு​வார்த்​தையை புறக்கணித்து​விட்டு,​​ வேலை​நி​றுத்த அறி​விப்​புக் கூட்​டத்தை புதன்​கி​ழமை நடத்தி​னர்.​​ இக்​கூட்​டத்​திற்கு தொமுச தலை​வர் ராமச்​சந்​தி​ரன் தலை​மை​ வகித்தார்.​ தொமுச அலு​வ​ல​கச் செய​லர் காத்​த​வ​ரா​யன்,​​ பாமக தொழிற்​சங்கத் தலை​வர் பெரு​மாள்,​​ செய​லர் தில​கர்,​​ பொரு​ளா​ளர் ஏஞ்ச​லின் மோனிகா,​​ அலு​வ​ல​கச் செய​லர் சுப்​ர​ம​ணி​யன் உள்​ளிட்​டோர் வேலை​நி​றுத்​தம் குறித்து விளக்​கிப் பேசி​னர்.​​ இறு​தி​யாக தொமுச செய​லர் ஆர்.கோபா​லன் கால​வ​ரை​யற்ற வேலை​நி​றுத்​தம் குறித்து அறி​விப்​புச் செய்​தார்.​ ​
 
                  இ ​தில் மருத்​து​வ​மனை,​​ குடி​நீர் மற்​றும் மின்​சா​ரப் பிரி​வில் பணி​பு​ரி​யும் தொழி​லா​ளர்​க​ளுக்கு விலக்கு அளிக்​கப்​பட்​டி​ருப்​ப​தா​க​வும்,​​ ஏனைய தொழில் மற்​றும் அலு​வ​ல​கப் பிரி​வு​க​ளில் பணி​யாற்​றும் தொழி​லா​ளர்​கள் மற்​றும் அலுவ​ல​கப் பணி​யா​ளர்​கள் வேலை​நி​றுத்​தத்​தில் பங்​கேற்​பர் என​வும் அறிவித்தார்.​   இதை​ய​டுத்து புதன்​கி​ழமை இர​வுப் பணி​மு​தல் தொழி​லா​ளர்​கள் ஸ்டிரைக்​கில் ஈடு​பட்​டுள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior