உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். தலைமை கணக்கு அலுவலர் தீனதயாளன் அலுவலக மேலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.

                  கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இலவசமாக விதை கரணை வழங்க வேண்டும். கரும்பு உதவியாளர்கள் பணி முறைகளை செம்மைப்படுத்த வேண்டும். தலைமை கரும்பு அலுவலர் பாரபட்சமில்லாமல் விவசாயிகள் மற்றும் கரும்பு துறை ஊழியர்களை அணுகி கரும்பு உற்பத்தியை பெருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டு நீர்பாசனத்திற்காக ஆக்கப்பூர்வமான  நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior