உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு: ஊழியர்கள் அச்சம்

கடலூர் : 

                   கடலூர் கலெக்டர் அலுவலக ஆவண காப் க அறையில் நல்ல பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காலை 7.30 மணிக்கு ஆறு அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட காவலர் காத்தவராயன் அதனை விரட்டினார். வராண்டாவில் புகுந்த அந்த பாம்பு ஆவண காப்பக அறைக் குள் சென்றது. உடன் கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அறை பூட்டப் பட்டிருந்ததால், வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர். பணிக்கு வந்த அலுவலக ஊழியர்கள் ஆவண காப்பகத்தில் நல்ல பாம்பு இருப்பதை அறிந்ததும் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior