உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

சவ ஊர்வலத்தில் தகராறு வாலிபர் கைது


கடலூர் :

           சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் முதுநகர் அடுத்த சித்திரைப் பேட்டையைச் சேர்ந்த லிங்குசாமி(55) என்பவர் இறந்தார். இவரது சவ ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. ஊர்வலம் அதே பகுதியில் உள்ள சுப்ராயன் வீட்டு மனை வழியாகச் சென் றது. சவ ஊர்வலம் என் வீட்டு வழியாகச் செல்லக் கூடாது என சுப்புராயன் தடுத்தார்.

                 இதனால் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த முரளி, மணி ஆகியோர் தாக்கியதில் காயமடைந்த சுப்புராயன் மற் றும் அவரது மனைவி மச்சக்காந்தி, உறவினர் ஷர்மிளா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து முரளி(28)யை கைது செய்தனர். மணியை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior