உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் பரிதாப சாவு

பரங்கிப்பேட்டை :

                     புதுச்சத்திரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி இறந்தார்.

                     புதுச்சத்திரம் மேட்டுப்பாளையம் வீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (48). இவர் நேற்று தனது எருமை மாடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு ஓட்டி சென்றார். ஓடை அருகே கீழே அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் கலியபெருமாள் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி கலியபெருமாள் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் ஓட்டிசென்ற எருமை மாடும் மின்சார கம்பியை மிதித்து இறந்தது.

                     இதுகுறித்து புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior