உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதிபலிக்கும் நாடாக்கள் ஒட்ட மத்திய அரசு உத்தரவு

கடலூர் :

                             போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதிபலிக்கும் நாடாக்கள் ஒட்ட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்த உத்தரவின்படி போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய் யப்படும் வாகனங்கள் மற்றும் தகுதிச்சான்று பெற வரும் வாகனங்கள் அனைத்திற்கும் சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிற பிரதிபலிக்கும் நாடாக் கள் ஒட்ட <உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே புதிய பதிவு மற்றும் தகுதிச்சான்று பணிகளுக்கு அலுவலகத் திற்கு எடுத்து வரும் பொழுது கீழ் கண்டவாறு பிரதிபலிக்கும் நாடாக் கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பத்து அல்லது அதற்கு மேல் இருக்கைகள் கொண்ட 5 டன் வரை எடை உள்ள பயணிகள் வாகனம் முன்புறம் வெள்ளை, பின்புறம் சிகப்பு நிறத்தில் 50 மி.மீ., அகலம் கொண்ட பிரதிபலிக்கும் நாடா ஒட்ட வேண்டும்.

                                பத்து அல்லது அதற்கு மேல் இருக்கைகள் கெண்ட 5 டன் எடை உள்ள பயணிகள் வாகனத்திற்கு முன்புறம் வெள்ளை, பின்புறம் சிகப்பு, பக்கவாட்டில் மஞ்சள் நிறமுள்ள பிரதிபலிக்கும் நாடா ஒட்ட வேண்டும். ஏழரை டன் எடையுள்ள இலகு ரக சரக்கு வாகனத்திற்கு முன்புறம் வெள்ளை, பின்புறம் சிகப்பு நிற நாடக்களை 20 மி.மீ., அகலத்திலும், ஏழரை டன் முதல் 12.5 டன் உள்ள வாகனங்களுக்கு முன்புறம் வெள்ளை, பின்புறம் சிகப்பு, பக்கவாட்டில் மஞ்சள் நிறமுள்ள 50 மி.மீ., அகலத்தில் பிரதிபலிப்பு நாடா ஒட்ட வேண்டும். ஒட்டப்படும் பிரதிபலிக்கும் நாடாக்கள் ஏ.ஐ.எஸ் 090-2005 ல் குறிப்பிட்டுள்ள தரமுடையவையாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior