உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

தொடர்​மழை:​ அரை​யாண்​டுத் தேர்வு விடு​முறை ரத்தாகுமா?

நெய்வேலி,​​ டிச.17: 

                       அரை​யாண்​டுத் தேர்வு நடந்து வரும் இத்​த​ரு​ணத்​தில் கடந்த ஒரு​வா​ர​மாக பெய்து வரும் தொடர் கன​ம​ழை​யால் பள்​ளி​க​ளுக்கு கட்​டாய விடு​முறை அளிக்க வேண்​டிய சூழல் ஏற்​பட்டு,​​ தேர்​வு​க​ளும் தள்​ளி​வைக்​கப்​ப​டும் என தினம் ஒரு அறி​விப்பு வெளி​யாகி வரு​வ​தால் நடப்​புக் கல்​வி​யாண்​டில் அரை​யாண்​டுத் தேர்வு முடி​வ​டைந்​த​வு​டன் விடப்​ப​டும் விடு​முறை ரத்​தா​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​

                      ந​டப்​புக் கல்​வி​யாண்​டின் அரை​யாண்​டுத் தேர்​வு​கள் இம் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்​கி​விட்​டது.​÷இந் ​நி​லை​யில் கடந்த ஞாயிற்​றுக்​கி​ழமை துவங்​கிய மழை தொடர்ந்து பெய்து வரு​வ​தால்,​​ கட​லோர மாவட்​டங்​க​ளில் உள்ள பள்​ளி​க​ளுக்கு டிசம்​பர் 15 முதல் தொடர்ந்து விடு​முறை அளிக்​கப்​ப​டு​கி​றது.​ 

                            தி​னந்​தோ​றும் இர​வில் தங்​க​ளது மாவட்​டங்​க​ளுக்கு விடு​முறை குறித்த அறி​விப்பு வெளி​யா​குமா?​ என்ற ஆவ​லில் மாண​வர்​கள் டிவி பார்க்​கத் துவங்​கி​வி​டு​கின்​ற​னர்.​ அட்​ட​வணை முறைப்​படி நடை​பெற வேண்​டிய தேர்​வு​க​ளும் ரத்​தா​வ​தால்,​​ ரத்​தான தேர்​வு​கள் ஒத்​தி​வைக்​கப்​பட்டு,​​ அரை​யாண்​டுத் தேர்வு விடு​முறை நாளில் தேர்​வு​களை நடத்தி விடு​மு​றையை ரத்து செய்​து​வி​டு​வார்​களோ என்ற கவலை மாண​வர்​க​ளுக்கு எழுந்​துள்​ளது.​

                     இந்​நி​லை​யில் கட​லூர் மாவட்​டத்​தில் பணி​பு​ரி​யும் அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் பள்​ளித் தலை​மை​யா​சி​ரி​யர்​களை அழைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் தலை​மை​யில் புதன்​கி​ழமை ஆலோ​ச​னைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ 

                 இக்​கூட்​டத்​தின் போது தற்​போது ரத்​தா​கும் தேர்​வு​களை விடு​முறை நாளில் நடத்​து​வது குறித்து கேட்​ட​றி​யப்​பட்​டது.​ இ ​தற்கு சில தலை​மை​யா​சி​ரி​யர்​கள் ஜன​வரி மாத தொடக்​கத்​தில் நடத்​த​லாம் என்​றும்,​வேறு சிலரோ விடு​முறை நாளில் நடத்​த​லாம் என​வும் ஆலோ​ச​னைக் கூறி​ய​தா​க​வும் தெரி​கி​றது.​ இ​ருப்​பி​னும் இறுதி முடிவு எது​வும் எடுக்​க​வில்லை.​ கிறிஸ்​துவ கல்வி நிறு​வ​னங்​கள்,​​ எதிர்​வ​ரும் கிறிஸ்​து​மஸ் மற்​றும் ஆங்​கி​லப் புத்​தாண்டை சிறப்​பாக கொண்​டாடி வரு​பவை.​ எனவே அந்த கல்வி நிறு​வ​னங்​க​ளின் நிலை​யை​யும் கல்​வித்​துறை கேட்​ட​றிய வேண்​டிய சூழல் உள்​ளது.​

                 இது குறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அமிர்​த​வள்ளி கூறி​யது:​ 

              மார்ச் மாதம் ஆண்​டுத் தேர்வு நடை​பெ​ற​வி​ருப்​ப​தா​லும்,​​ தற்​போது விடுப்​பட்ட விடு​முறை தினங்​களை ஈடு செய்​யும் வித​மாக அரை​யாண்​டுத் தேர்வு விடு​மு​றை​களை ரத்து செய்ய உத்​தே​சித்​துள்​ளோம்.​ ரத்​தான தேர்​வு​களை எப்​போது நடத்​து​வது என்​பது குறித்து செய்ய கருத்​தை​யும் கேட்​ட​றிந்த பின்​னர்​தான் ரத்​தான தேர்​வு​களை எப்​போது நடத்​தப்​ப​டும் என்று தெரி​ய​வ​ரும் என்​றார் அமிர்​த​வள்ளி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior