உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

பண்ருட்டியில் தொடர்மழையினால் நெல் விளைச்சல் தண்ணீரில் மூழ்கியது


பண்ருட்டி :

                          பண்ருட்டி பகுதியில் தொடர் மழைக்கு இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி, எனதிரிமங்கலம், காவனூர், உளுத்தாம்பட்டு, அக்கடவல்லி, ஏ.பி.குப்பம், கரும்பூர், ஒறையூர், மேல்குமாரமங்கலம், தாழம்பட்டு ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் விளைந்திருந்தன. கடந்த 7 நாட்களாக பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக இப்பகுதியில் உள்ள 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி வீணாகி வருகிறது.

                                 கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பயிர்கள் தண்ணீரில் முழ்கி அழுகும் நிலையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.அதுபோல் கத்திரி,வெண்டைக்காய் செடிகளில் பூக்கள் உதிர்ந்து விட்டதால் கத்திரிக்காய் உற்பத்தியும் கடுமையாக பாதித்துள்ளன. வரும் தை மாதம் முதல் விற்பனைக்கு வரவேண்டிய காலிபிளவர், முட்டை கோஸ் பயிர் நிலங்களிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் அழுகிவிடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior