உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

வெள்ளக்காடானது கடலூர் நகரம்

கடலூர்,​​ ​ டிச.​ 17:​ 
 
                    தொடர்ந்து பெய்​து​வ​ரும் மழை கார​ண​மாக கட​லூர் நக​ரில் தாழ்​வான பகு​தி​க​ளில் உள்ள பல நகர்​களை மழை​நீர் சூழ்ந்​துள்​ளது.​ ​​ வங்​கக் கட​லில் உரு​வான புயல் சின்​னம் கார​ண​மாக கட​லூர் மாவட்​டத்​தில் கடந்த 5 நாள்​க​ளாக கன மழை பெய்து வரு​கி​றது.​ இத​னால் தாழ்​வான பகு​தி​க​ளான கே.என்.பேட்டை தானம் நகர்,​​ திருப்​பாப்பு​லி​யூர் குப்​பங்​கு​ளம்,​​ குண்டு உப்​ப​ள​வாடி,​​ சுத்​துக்​கு​ளம்,​​ பெரி​யார் நகர்,​​ அழ​கப்பா நகர்,​​ ஆல்​பேட்டை,​​ புதுப்​பா​ளை​யம் மணலி எஸ்​டேட்,​​ ​ கே.கே.நகர் உள்​ளிட்ட பல பகு​தி​களை மழை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது.​÷கே.கே.​ நக​ரில் 200-க்கும் மேற்​பட்ட வீடு​கள் மற்​றும் தனி​யார் பாலி​டெக்​னிக் கல்​லூ​ரி​யும் உள்​ளன.​    
 
                      இப்​ப​கு​தி​யில் ​ மழை​நீர் தேங்கி அப்​ப​குதி மக்​கள் பிர​தா​னச் சாலைக்கு வர​மு​டி​யா​மல் தவித்​த​னர்.​ நக​ராட்சி உறுப்​பி​னர் முத்து முயற்​சி​யால் வியா​ழக்​கி​ழமை பொக்​லைன் இயந்​தி​ரம் கொண்டு வரப்​பட்டு,​​ தேங்​கிய மழை​நீர் உப்​ப​னாற்​றில் வடிய ஏற்​பாடு செய​யப்​பட்​டது.​ அதைத் தொடர்ந்து மழை​நீர் வடிந்​தது.​
 
                          நக​ரில் ஏற்​கெ​னவே பெய்த மழை​யால் பாதிக்​கப்​பட்ட சாலை​களை சீர​மைக்​கும் முன்​ன​தாக,​​ தற்​போ​தைய மழை​யால் மீண்​டும் சாலை​கள் மிக​மோ​ச​மாக பழு​த​டைந்து விட்​டன.​ இத​னால் மக்​கள் போக்​கு​வ​ரத்து பெரும் சிர​மத்​துக்கு உள்​ளாகி இருக்​கி​றது.​ நெல்​லிக்​குப்​பம் சாலை,​​ வண்​டிப்​பா​ளை​யம சாலை மற்​றும் ​ பிர​தா​னச் சாலை​க​ளில் இருந்து பிரி​யும் நக​ராட்சி சாலை​கள் ​ பெரும்​பா​லா​னவை மிக மோச​மாக பழு​த​டைந்து கிடக்​கின்​றன.​ இத​னால் ஆட்டோ ரிக்ஷா,​​ வாடகை கார் ஓட்​டு​நர்​கள் அப் பகு​தி​க​ளுக்கு வர​ம​றுக்​கி​றார்​கள்.​ ​
 
                   கேப்பர் மலை​யில் உள்ள 20-க்கும் மேற்​பட்ட கிரா​மங்​களை இணைக்​கும் வண்​டிப்​பா​ளை​யம் சாலை பெரு​ம​ள​வுக்கு சேதம் அடைந்து கிடக்​கி​றது.​ இதில் சைக்​கிள்​கள் கூடச் செல்​ல​மு​டி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.​ இச்​சா​லை​யில் உள்ள சிறிய பாலம் உடைந்து பெரிய பள்​ளம் ஏற்​பட்​ட​தால் அந்த வழி​யா​கச் செல்​லும் வாக​னங்​க​ளுக்கு அச்​சத்தை ஏற்​ப​டுத்தி உள்​ளது.​
 
                       மே​லும் சர​வ​ணன் நகர்,​​ நத்​த​வெளி சாலை​யோ​ரம் உள்ள நகர்​கள்,​​ அம்​பேத்​கார் நகர்,​​ பி.டி.ஜே.கார்​டன் உள்​ளிட்ட பல பகு​தி​க​ளில் இருந்து வரும் மழை​நீர்,​​ வாய்க்​கால்​கள் ஆக்​கி​ர​மிக்​கப்​பட்​ட​தால்,​​ மழை​நீர் வழிந்​தோட வழி​யின்றி வண்​டிப்​பா​ளை​யம் சாலை​யோ​ரம் உள்ள கோயில் விளை​நி​லத்​தில் பல நாள்​க​ளா​கத் தேங்​கிக் கிடக்​கி​றது.​ இத​னால் அப்​ப​குதி மக்​க​ளின் சுகா​தா​ரம் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior