உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் வெள்ள அபாயத்தை தவிர்க்க இரு திட்டங்கள்: ​ஆட்​சி​யர்

சிதம்​ப​ரம்,​​ ​ டிச.17:​ ​ 

                      கட​லூர் மாவட்​டத்​தில் குறிப்​பாக சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​காக்​க​ளில் ஆண்டு தோறும் ஏற்​பட்டு வரும் வெள்ள அபா​யத்தை தடுக்க மாநில அரசு நிரந்​தர தீர்வு காண கோரி​ய​தன் பேரில் சென்னை சேப்​பாக்​கம் நீர் ஆதா​ரங்​கள் துறை முதன்மை பொறி​யா​ள​ருக்கு மாவட்ட நிர்​வா​கம் மூலம் இரு திட்​டங்​கள் செயல்​ப​டுத்த முன்​மொ​ழிவு கடி​தம் வியா​ழக்​கி​ழமை அனுப்​பப்​பட்​டுள்​ளது என கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தெரி​வித்​தார்.​

                 சி​தம்​ப​ரம் கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் வியா​ழக்​கி​ழமை அவர் செய்​தி​யா​ளர்​க​ளுக்கு அளித்த பேட்டி:​ 

                             வெள்ள அபா​யத்தை தடுக்க நிரந்​தர தீர்வு என்ன என்​பதை சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள நீர் ஆதா​ரங்​கள் துறை முதன்மை பொறி​யா​ளரை தொடர்பு கொள்​ளு​மாறு மாநில அர​சால் வியா​ழக்​கி​ழமை கோரப்​பட்​டது.​÷அ​தன் பேரில் முதன்மை பொறி​யா​ளரை தொடர்பு கொண்டு இரு திட்​டங்​களை தெரி​வித்து முன்​மொ​ழிவு கடி​தம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.​ அதா​வது வடி​கால் பகு​தி​யான சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​கா​க​ளுக்​கும் வரும் கரு​வாட்​டு​ஓடை,​​ செங்​கால்​ஓடை,​​ பாளை​யங்​கோட்டை ஓடை,​​ ஆண்​டிப்​பள்​ளம்​ஓடை ஆகி​ய​வற்​றின் உப​ரி​நீரை ஆங்​காங்கே தேக்கி வைக்​க​வும்,​​ வீரா​ணம் ஏரி​யில் உள்ள மணல்​மே​டு​கள் மற்​றும் காடு​களை அகற்றி,​​ கரை​களை பலப்​ப​டுத்தி ஏரி​யின் கொள்​ள​ளவை உயர்த்​து​வது என இரு திட்​டங்​களை செயல்​ப​டுத்த நீர் ஆதா​ரங்​கள் துறைக்கு முன்​மொ​ழிவு கடி​தம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.​வீரா​ணம் ஏரி​யின் 28 மத​கு​களை சீர​மைக்​க​வும்,​​ சேத்​தி​யாத்​தோப்பு பாழ்​வாய்க்​கா​லில் ரெகு​லேட்​டர் அமைக்​க​வும்,​​ ஆறு,​​ வாய்க்​கால்​களை பலப்​ப​டுத்த ரூ.23 கோடியே 68 லட்​சம் நிதி ஏற்​கெ​னவே ஒதுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் மழை நின்​ற​வு​டன் தொடங்​கப்​ப​டும்.​

                       க ​ட​லூர் மாவட்​டத்​தில் கடந்த ஆண்டு டிசம்​பர் வரை 125.47 மி.மீ.​ மழை பெய்​துள்​ளது.​ இந்த ஆண்டு வியா​ழக்​கி​ழமை ​(டிசம்​பர் 17) வரை 223.99 மி.மீ.​ மழை இரு மடங்​காக பெய்​துள்​ளது.​ இதில் டிசம்​பர் மாதம் அதிக மழை பெய்​துள்​ள​தா​லும்,​​ பெரம்​ப​லூர்,​​ அரி​ய​லூர் உள்​ளிட்ட அண்டை மாவட்​டங்​களி​லி​ருந்து வரும் உபரி நீரி​னால் தற்​போது வெள்​ளச் சேதத்தை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.​

                   மே​லும் வீரா​ணம் ஏரிக்கு கூடு​த​லாக வரும் உபரி நீரை வெளி​யேற்​றப்​ப​டு​வ​தால் குறிப்​பாக காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் உள்ள விவ​சா​யி​க​ளுக்​கும்,​​ மக்​க​ளும் எதிர்​நோக்​கி​யுள்ள பிரச்​னை​யா​கும்.​

                      ஏ​ரி​யின் நீர்​மட்​டம் வியா​ழக்​கி​ழமை மாலை 46.4 அடியை எட்​டி​யுள்​ளது.​ ஏரியி​லி​ருந்து 5 ஆயி​ரம் கன​அடி நீர் வெள்​ளி​யங்​கால்​ஓ​டை​யி​லும்,​​ வி.என்.எஸ்.​ அணைக்​கட்​டி​லும் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது.​ அண்டை மாவட்​டங்​களி​லி​ருந்து வரும் உபரி நீர் குறைந்து விட்​ட​தால் ஏரிக்கு நீர்​வ​ரத்து 3ஆயி​ரம் கன​அ​டி​யாக குறைந்​துள்​ளது.​

                    நீர்​மட்​டம் 46.2 அடி குறைந்​த​வு​டன் ஏரியி​லி​ருந்து நீர் வெளி​யேற்​று​வது நிறுத்​தப்​ப​டும்.​ காட் ​டு​மன்​னார்​கோ​வில் அருகே உள்ள திரு​நா​ரை​யூர்,​​ நடுத்​திட்டு,​​ வீர​நத்​தம்,​​ சர்​வ​ரா​ஜன்​பேட்டை,​​ நந்​தி​மங்​க​லம்,​​ வானா​தி​ரா​யன்​பேட்டை உள்​ளிட்ட கிரா​மங்​க​ளில் 1700 ஏக்​க​ரில் நெற்​ப​யிர்​கள் நீரில் மூழ்​கி​யுள்​ளது வியா​ழக்​கி​ழமை எடுக்​கப்​பட்ட கணக்​கெ​டுப்​பில் தெரிய வந்​துள்​ளது.​

                   வெள்​ளிக்​கி​ழமை மீண்​டும் முழு​மை​யாக கணக்​கெ​டுத்து பயிர்​சே​தம் குறித்​தும்,​​ நிவா​ர​ணம் எவ்​வ​ளவு வழங்​கு​வது குறித்​தும் அரசு பரிந்​து​ரைக்கு அனுப்​பப்​ப​டும்.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் இது​வரை மழை,​​ வெள்​ளத்​தில் பகு​தி​யாக 56 வீடு​க​ளும்,​​ முழு​மை​யாக 15 வீடு​க​ளும் சேத​ம​டைந்​துள்​ளது.​ கட​லூர் தாலுக்கா தானூ​ரில் ​ மனித இழப்பு ஒன்​றும் ஏற்​பட்​டுள்​ளது.​ 245 ஏரி,​​ குளங்​க​ளில் 145 முழு​மை​யா​க​வும்,​​ 105 ஏரி,​​ குளங்​கள் 75 சத​வீ​தம் நிரம்​பி​யுள்​ளது.​

                  மே​லும் காவிரி டெல்டா மாவட்​டங்​க​ளில் மழை பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ள​தால் வெள்​ளி​யங்​கால்​ஓடை,​​ விஎன்​எஸ் அணைக்​கட்டு கரை ஒரம் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பாக இருக்க அறி​வு​றுத்​தப்​ப​டு​கி​றது என ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தெரி​வித்​தார்.​

               மா​வட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​​ சிதம்​ப​ரம் கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம் உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior