உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

13-ல் சிதம்பரம் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்கம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலில் நடத்தப்படும் நாட்டியாஞ்சலி விழா மகா சிவராத்திரியான இம்மாதம் 13-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. தொடக்க நாளன்று பிரபல நாட்டியக் கலைஞர்களான பத்மா சுப்பிரமணியன், ஊர்மிளா சத்தியநாராயணன் உள்ளிட்டோர் நாட்டியமாடுவர். மகா சிவராத்திரயன்று மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய, விடிய அதிகாலை 5 மணி வரை நடைபெறும். மற்ற நான்கு நாள்களும் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வழக்கறிஞர் ஏ.கே. நடராஜன், செயலர் ஏ. சம்பந்தம், துணைச் செயலர் ஆர். நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர். ராமநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior