உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

காடாம்புலியூர், பெண்ணாடத்தில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூர் : 

              காடாம்புலியூர், பெண்ணாடத்தில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  பண்ருட்டி அடுத்த தெற்கு மாம்பட்டைச் சேர்ந்தவர் அறுபடை(32). இவர் மீது காடாம்புலியூர் போலீசில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவற்றை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க பரிந்துரை செய்தார்.

                  கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் அறுபடை குண்டர் தடுப் புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அதே போல் பெண்ணாடம் இறையூர் காலனியைச் சேர்ந்தவர் சசிக்குமார்(27). இவர் மீது பெண்ணாடம், வேப்பூர், திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் தொடர் திருட்டுக் களில் ஈடுபட்டு வந்ததால் சசிக்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior